சுனாமி நிவாரணத்தில் அரசியல்: திமுக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

சுனாமி நிவாரணப் பணிகளில் தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று குற்றம்சாட்டி திமுக மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் நடந்த திமுக மாநாட்டில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

சுனாமி நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு அரசியலாக்கியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்கள், ஆளுங்கட்சியைச்சார்ந்தவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

நிவாரணக் குழுக்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இந்தக் குழுக்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. நிவாரணஉதவிகள் மீனவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழுமையாக சென்றடைய இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டும்.

மீனவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 லிட்டர் மானிய டீசலை 5,000 லிட்டராக அதிகரிக்க வேண்டும்.

காவிரி நடுவர் ஆணையத்தின் இறுதித் தீரப்பை விரைவில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் அணையில் கூடுதல் நீரை சேமித்து வைக்க கேரள அரசின் ஒப்புதலை விரைவில் பெற்று மத்திய நீர் வளத்துறைஆணையம் உதவிட வேண்டும்.

ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற மத்திய தேர்தல் ஆணையம் ஆவனசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+