தமிழகம் முழுவதும் திடீர் கன மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. நெல்லை, குமரிமாவட்டங்களின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது.
கோடை காலம் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கும் முன்பே பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது.
இந் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறுதென் மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது.
கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பால் பீதிக்குள்ளாகியுள்ள நெல்லை, குமரி மாவட்டங்களில் நேற்றும் கடல் கொந்தளிப்புஅதிகமான அளவில் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications