அமைதியாய் பயமுறுத்தும் கடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடல் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியதாக நேற்று நள்ளிரவில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

சுனாமி வந்து போன பிறகு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி பரவியவண்ணம் உள்ளது.

இந் நிலையில், சென்னை கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு கடல் நீர் உள் வாங்கியதாகவும், இதனால் விரைவில் பெரிய அலைகள்உருவாகி கரையைத் தாக்கலாம் என்றும் செய்திகள் பரவின. இதனால் கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி கடலில் அலைகள் மாயம்!

இந் நிலையில் தூத்துக்குடியில் கடலில் திடீரென அலைகள் பெருமளவில் குறைந்து போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அலைகள் உயர்ந்து கடல்நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால்உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தென்னந்தோப்புகள் நாசமாகியுள்ளன.

இந் நிலையில் தூத்துக்குடி கடற்பகுதியில் வழக்கமாக பேரிரைச்சலுடன் காணப்படும் அலைகள் தற்போது இல்லை. கடல் எந்த ஆரவாரமும் இல்லாமல்குளம் போல காட்சியளிக்கிறது.

வழக்கத்தை விட மாறாக கடல் அலையில்லாமல் மிகவும் அமைதியாக இருப்பதால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+