தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டன: ஜெ
சென்னை:
வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்து பேசுகையில்,காவல்துறையினரின் சிறப்பான கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை காரணமாக தமிழகத்தில் பொது இடங்களானதிரையரங்குகள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் குற்றம் இழைப்போர்வெகுவாக குறைந்து விட்டனர்.
பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்துவோர் குறித்த வழக்குகளைப் பொருத்தவரை கடந்த 2003ம்ஆண்டை விட 2004ம் ஆண்டில் அதிகளவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகளும் அதிக அளவில்பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் ரூ. 18.12 கோடி செலவில் 151 காவல்
நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் பதினான்கு இடங்களில் 49 காவல் நிலையங்களுக்கானகட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
ரூ. 3 கோடி மதிப்பில் 25 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 15 காவல்நிலையங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
1992ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தீரமிக்க நடவடிக்கையின் காரணமாககொலைகாரனும், வழிப்பறிக் கொள்ளையனுமான வீரப்பன் கொல்லப்பட்டான்.
சிறப்பு அதிரடிப்படையினருக்கு அளிக்கப்பட்ட முக்கியப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்ட போதிலும்,உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் வனச் சூழலை மேம்படுத்தவும், வனங்கள் தீவிரவாதிகளின் புகலிடமாகமாறுவதைத் தடுக்கவும், பல்வேறு பதவி நிலையில் உள்ள 242 பணியாளர்களுடன் இப்படை தொடர்ந்து இயங்கஉத்தரவிட்டுள்ளேன்.
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் காவலர்கள் தங்குவதற்காக ரூ. 67.3 லட்சம் மதிப்பில் ஜாபர் சாரங்தெருவில் விருந்தினர் அறைகள்; பெண் காவலர்கள் தங்குவதற்காக ஐசக் தெருவில் ரூ. 62.2 லட்சம் மதிப்பில்விருந்தினர் அறைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications