சுனாமியால் இணைந்த 12 உள்ளங்கள்
கடலூர்:
சுனாமிக்கு தங்களது குடும்பங்களை பலி கொடுத்த இருவர் மறுமணம் செய்து கொண்டனர். இவர்கள் தவிர சுனாமியால்பாதிக்கப்பட்ட மேலும் 10 ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டனர்.
சுனாமி பாதித்த கடலூர், நாகை மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சுனாமி சமயத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த பலதிருமங்கள் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது அரசின் உதவியால் மொத்தமாக இத் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முடசல்ஓடை கிராமத்தைச் சேர்ந்த 12 ஜோடிகளின் திருமணம்சிதம்பரத்தில் நடந்தது. இதில் இருவர் சுனாமிக்கு தங்களது குடும்பங்களை மொத்தமாக பலி கொடுத்தவர்கள் ஆவர்.
நடு முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த அப்பாராஜ் என்பவர் சுனாமிக்கு தனது மனைவி, இரு மகள்களை பலி கொடுத்தார்.அவரும், நான்கு மகன்களும் மட்டும் உயிர் தப்பினர்.
இந் நிலையில் மறுமணம் செய்து கொள்ளுமாறு அப்பாராஜை உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். அதை ஏற்ற அப்பாராஜ், வடக்குமுடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டார். இவர் சுனாமிக்கு தனதுகுடும்பத்தையே பலி கொடுத்துவிட்டு அநாதரவானவர்.
இவர்களது திருமணம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. தங்களது தந்தையின் திருமணத்தைக்காண மகன்களான மோகன், நடராஜ், விஜயராஜ், புஷ்பராஜ் ஆகியோர் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
இதேபோல, எம்.ஜி.ஆர். திட்டு பகுதியைச் சேர்ந்த செண்பகமூத்தி என்பவர், மல்லிகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.செண்பகமூர்த்தியின் மனைவி சிந்தாமணி டிசம்பர் 26ம் தேதி சுனாமிக்குப் பலியானார். அவர்களுக்கு அனிதா என்ற 10 வயதுமகள் மட்டுமே உள்ளார்.
இதுதவிர மேலும் 10 திருமணங்களும் நடந்தன. சிதம்பரம் துணை கலெக்டர் ராஜேந்திர ரத்னூர் இத் திருமணங்களை நடத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications