இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை !
பிரஸ்ஸல்ஸ்:
இந்தியாவிலேயே தனி நபர் பாதுகாப்பு அதிகம் உள்ள நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த மனித வள ஆலோசனைக் குழு மெர்ஸர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.உலகில் உள்ள 215நகரங்களில் பல்வேறு தரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழ்க்கைத் தரத்தில் ஜெனீவா நகரம்தான் முதலிடத்தில் விளங்குகிறது. தனி நபர் வாழ்க்கைத் தரம் ஜெனீவாவில்மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் ஜூரிச், வியன்னாஆகியவை வருகின்றன.
உலகின் சிறந்த 50 நகரங்களில், 25 நகரங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை. லண்டன், ஏதென்ஸ், ரோம்ஆகிய நகரங்களில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இருப்பதால் அந்த நகரங்களின் ரேங்க் வெகுவாகக்குறைந்து விட்டது.
இந்திய நகரங்களில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரமாக மும்பை விளங்குகிறது. உலக அளவில் மும்பை150வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்து டெல்லியும், பெங்களூரும் (153வது இடம்) ஒரே இடத்தில்உள்ளன.
தனி நபர் பாதுகாப்பைப் பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த நகரமாக சென்னை விளங்குகிறது. உலகஅளவில் சென்னைக்கு 112வது இடம் கிடைத்துள்ளது. பெங்களூருக்கும் இதே இடம்தான் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி (126), மும்பை (139) ஆகியவை வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், குறிப்பாக சென்னை மாநகரில் குற்றச் செயல்கள்குறைந்து வருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறி வரும் நிலையில், இந்த செய்தி அவருக்கு வலு சேர்ப்பதாகஅமையும்.












Click it and Unblock the Notifications