சட்டசபையில் கையெழுத்து போட்ட கருணாநிதி
சென்னை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபைக்கு வந்த கருணாநிதி, இன்றும் அவைக்குள் வராமல் கையெழுத்து மட்டும்போட்டு விட்டுச் சென்றார்.
சேப்பாக்கம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில்பங்கேற்பதில்லை. பதவி பறி போய் விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சட்டசபை வளாகம் வரை வந்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்கிறார்.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று அவர் சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள வருகைப் பதிவேட்டில்அவர் கையெழுத்திட்டார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் அறைக்குச் சென்ற அவர் அங்கு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் தலைவர் ஹேமச்சந்திரன்உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கருணாநிதியை நிருபர்கள் சந்தித்து, சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள்தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு, சட்டசபையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications