இலங்கைக்கு ரேடார்கள் வழங்கும் பாக்
கொழும்பு:
இலங்கைக்கு நவீன ரக ரேடார்களை வழங்க பாகிஸ்தான் முன் வந்துள்ளது. இதற்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
இஸ்ரேலைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான் உதவ ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை வந்த பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷெல் ரலீம் சதாத், அதிபர் சந்திரிகாவைச் சந்தித்துப்பேசியபோது இந்த ரேடார்கள் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இது குறித்து சுடர் ஒளி தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
விடுதலைப் புலிகள் போர் விமானம் வாங்கியுள்ளதாக இலங்கை அரசு கூறிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் இந்தரேடார்களை இலங்கைக்கு வழங்க பாகிஸ்தான் முன் வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு அமெரிக்காவின்ஆசிர்வாதமும் உண்டு.
இந்த நவீன கண்காணிப்பு ரேடார்களை இலங்கை வாங்குவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. இதனால் இந்தவிஷயத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த ரேடார் விற்பனையின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதையும்இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருவதை இந்தியா உணர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.