ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் தர்ணா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் திடீர் தர்ணாவில் இறங்கினர்.
தமிழக சட்டசபையிலிருந்து நேற்றும் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டஅவர்கள் சட்டசபை வளாகத்தில் திடீர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் தலைமையில் தர்ணா நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சபாநாயகரை ஆபாசமாகத் திட்டியதால் ஒரு நாள் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட வெள்ளக்கோவில்சாமிநாதன், மொய்தீன்கான் ஆகியோர் தரையில் படுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் விரைந்து வந்து அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
சாமிநாதனையும், மொய்தீன் கானையும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு வந்து வெளியில் விட்டனர். பின்னர்திமுகவினர் அங்கிருந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications