Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகிரி மீதான திருட்டு விசிடி வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திருட்டு வீடியோ வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரைநீதிமன்றம் மே மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தபோது தென் மாவட்டங்களில் அதிகாரம் செலுத்தி வந்தார் அழகிரி.

அண்ணன், தளபதி, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட அழகிரி அரசுநிர்வாகத்திலும் ரொம்பவே தலையிட்டார். திமுகவிலும் கோஷ்டி அரசியல் நடத்தி வந்தார்.

இந்த கோஷ்டி மோதல்கள் தீவிரமாக இருந்த நிலையில் தா.கிருட்டிணன் கொலையானார்.

ஓவராய் ஆடிய அழகிரியின் ஆட்டம் இந்தக் கொலைக்குப் பின் அடங்கியது. இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டதோடு, அழகிரி நடத்தி வந்த வீடியோ கடையிலும் சோதனை நடந்தது.

திருட்டு விசிடிக்களை வைத்திருந்ததாக இன்னொரு வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் அவருடன் மேலாளர் தாமோதரனும்கைது செய்யப்பட்டார்.

இருவரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த திருட்டு விசிடி மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை விரைவு நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நீதிபதி வெங்கடசாமி இன்று விசாரித்து மேற்கொண்டு விசாரணையை மே 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

கொஞ்ச நாளாய் அடங்கியிருந்த அழகிரி இப்போது மீண்டும் திமுகவில் தனது கோஷ்டிக்கு உயிர் கொடுத்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+