"அம்மா" பிரதமராக வேண்டி கத்தியால் குத்தி நேர்த்திக் கடன்!
ஓசூர்:
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன்செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது.இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல்அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார்.
மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறிபந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பலமுறை குத்திக் கொண்டார்.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நேர்ந்து கொண்டதாகவும், அதற்காகவே கத்தியால் குத்திக் கொண்டதாகவும் இஸ்லாம்கூறினார். அவரது செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications