குற்றப்பத்திரிக்கை நகல் இழுத்தடிப்பு: சிங்கால் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலை வேண்டுமென்றே தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்றுவிஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.

கலவை சென்ற அவர், அங்கு ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், வேண்டுமென்றே சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலை தருவதற்கு தமிழக அரசுதாமதம் செய்து வருகிறது. ஜெயேந்திரரை அவமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம். அவரைவேதனைப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.

ஜெயேந்திரர் இந்து மதத்தின் மூத்த தலைவர். அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மிகவும்தவறாகும்.

ஜெயேந்திரருக்குப் பின்னால் நாட்டு மக்கள் உள்ளனர். அவரிடம் இப்படிப்பட்ட அரசியல் செல்லுபடியாகாது.நீண்ட நாட்களுக்கு இது நீடிக்காது என்றார் சிங்கால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+