கனிஷ்கா: 2 சீக்கியர்களும் விடுதலை!
வான்கூவர்:
329 பயணிகளைப் பலி வாங்கிய கனிஷ்கா விமான குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டுசீக்கியர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
1985 ஜூன் 23ம் தேதி, ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம் கனடாவிலுள்ள டொரண்டோவிலிருந்து மும்பைக்குபுறப்பட்டது. இந்த விமானம் அயர்லாந்து கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த 329 பயணிகள் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கனடாவில்வாழ்ந்த சீக்கியர்களான ரிபுதமன்சிங் மாலிக் மற்றும் அஜியாப்சிங் பக்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 வருடங்களாக பெரும் இழுத்தடிப்புடன் கனடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஒருவழியாக இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாலிக் மற்றும் பக்ரியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு சரிவரநிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும்,எனவே இது குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் விமான விபத்தில் தனது தாயை பறிகொடுத்தசுஷீல் குப்தா என்பவர் தெரிவித்தார்.
இதே கருத்தையே பிற பயணிகளின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பொற்கோவில் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துவிமானத்தில் குண்டு வைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications