For Daily Alerts
Just In
எனக்கு கூட்டணி ஆட்சிதான் வேணும்....டாக்டர் கிருஷ்ணசாமி அடம்
ஈரோடு:
தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி வர வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. இதுகுறித்த விவாதங்களிலும் மக்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
எனவே கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிகளுக்குத்தான் மக்கள் ஆதரவும், ஓட்டும் கிடைக்கும். கூட்டணி ஆட்சிவந்தால் தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நல்லது.
புதிய தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. ஆனால் தேர்தலின்போது எந்தக் கூட்டணியிலும்சேர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
கோவையில் ஏப்ரல் 14ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடக்கும் என்றார் கிருஷ்ணசாமி.
Comments
Story first published: Thursday, March 17, 2005, 5:30 [IST]