கூட்டணி ஆட்சி குறித்து கேட்காதீர்கள்: ராமதாஸ் எரிச்சல்!
தர்மபுரி:
கூட்டணி ஆட்சி குறித்து திருப்பித் திருப்பிக் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்எரிந்து விழுந்தார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் தற்போது உள்ள ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் எந்தப் பிளவும் ஏற்படாது. வேண்டுமானால் கூடுதலாக சில கட்சிகள் சேரலாம். கூட்டணியில்திருமாவளவனும் இடம் பெறுவார் என்பதை மனதில் வைத்துத்தான் இதைச் சொல்கிறேன்.
திருமாவளவன் ஐனநாயக முற்போக்குக் கூட்டணியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. அவர்விரும்புகிறாரோ, இல்லையோ, எனது விருப்பத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.
வருகிற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வர பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அதை மனதில்வைத்துத்தான் அரசுத் தரப்பு பல்வேறு காரியங்களில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருமா என்ற கேள்விக்கு ஏற்கனவே எங்களது கூட்டணியினர் போதுமான அளவுக்குபதில் கூறி விட்டனர். திரும்பத் திரும்ப இதையே ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு வேறு கேள்வி இல்லையா?
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிக அளவில் பரவியுள்ளது. இதிலிருந்து மீள வேண்டியதின் அவசியத்தைஎடுத்துக் கூறி மக்களை தயார்படுத்தும் பணியை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் செய்து வருகிறது.
திருச்சியில் வருகிற 26ம் தேதி 3வது மொழிப் போர் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தின் நான்குமுனைகளிலிருந்து ஊர்திப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையிலிருந்து நான் மேறகொள்ளும் ஊர்திப்பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி 22ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications