சங்கரராமன்: போலி குற்றவாளிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு அமர்வுநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சங்கரராமன் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த போலிகுற்றவாளிகள் சேகர், தேவராஜ், அருண் உள்ளிட்டோர் தங்களை ஜாமீனில் விடக் கோரி செங்கல்பட்டு அமர்வுநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு நீதிபதி வணங்காமுடி முன்னிலையில் நேற்று நடந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆறுமுகம், போலி குற்றவாளிகள் 3 பேரையும் ஜாமீனில்விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவர், இவ்வழக்கில் குற்றப்பத்திக்கை தாக்கல் சய்யப்பட்டு விட்டது.எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
அதைக் கேட்ட நீதிபதி வணங்காமுடி, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications