கிரிக்கெட்: ஏப்ரலில் இலங்கை அணி வருகை
கொழும்பு:
இந்தியாவுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் மாத இறுதியில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காகநியூசிலாந்து சென்றது. அப்போது இலங்கையில் சுனாமியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை அணி சுற்றுப் பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நாடு திரும்பியது. இதனால் கடந்த 3மாதங்களாக அந்த அணி எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. 6 ஒரு நாள்போட்டிகளை முடித்து விட்டு பாகிஸ்தான் அணி ஏப்ரல் 15ம் தேதி புறப்பட்டதும் , இலங்கை அணி 18ம் தேதி இங்கு வருகிறது.
போட்டிக்கான தேதி மற்றும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் மட்டும் இந்தியா, பாகிஸ்தானுடன் 6, இலங்கையுடன் 5 என மொத்தம் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications