For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்களுக்கும் புத்துணர்ச்சி முகாம்: காங்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவதைப் போல, தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் விதத்தில்முகாம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் அவர் பேசுகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் யானைகளுக்கு முதுமலை காட்டில் புத்துணர்ச்சி முகாமை நடத்திவருகிறது. இது நல்ல பலனைத் தந்துள்ளது.

அதேபோல, நமது எம்.எல்.ஏக்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாம் நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்களும்புத்துணர்வு பெற்று, ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்றார் விநாயகமூர்த்தி.

இதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, இதுகுறித்து முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கைஎடுப்பார் என்றார்.

விநாயகமூர்த்தியின் இந்தக் கோரிக்கை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதம் பார்க்காமல் வரவேற்றனர். இதில்,யானைகள் முகாமை கண்டித்த திமுக உள்ளிட்ட கட்சிகளும் அடக்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X