For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோஷி மீது அவதூறு வழக்கு: ஜெ. அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர் மீது உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கூறிய பாஜக மூத்ததலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ்மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த நவம்பர் 14ம் தேதி வேலூர் மத்திய சிறையில் சங்கராச்சாரியாரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசியமுரளிமனோகர் ஜோஷி, உள் நோக்கத்துடன் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைதில் பெரிய சதித்திட்டமே அடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துக்கள் தமிழக அரசுக்கு அவதூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.

இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

பல பாஜக தலைவர்களும் ஜெயேந்திரர் விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில், கட்சிக்குள்தலைவர் அத்வானிக்கு எதிராக கோஷ்டி நடத்தி வரும் ஜோஷி மீது மட்டும் அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X