கலவையில் நிரந்தரமாக தங்குகிறார் ஜெயேந்திரர்!
கலவை:
இனிமேல் காஞ்சிபுரம் திரும்பப் போவதில்லை, கலவை மடத்திலேயே தங்கப் போவதாக ஜெயேந்திரர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான பிறகு காஞ்சிபுரம் வராமல் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ளகலவையில் உள்ள சங்கர மடத்திற்கு சென்று தங்கினார்.
அதுவரை கவனிப்பின்றி கிடந்த கலவை மடம் ஜெயேந்திரர் வருகையால் புதுப் பொலிவு கண்டது. கூடுதலாக சில அறைகளும், சமையல் கூடங்களும், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டன. புதிய வசதிகளும் மடத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இதனால் ஜெயேந்திரர் இனிமேல் கலவை மடத்தில்தான் தங்குவார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் இதை ஜெயேந்திரர் தரப்பு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்த நிலையில், ரவிசுப்ரமணியம் மிரட்டப்பட்ட வழக்கு, திருக்கோட்டியூர் மாதவன் வழக்கு ஆகியவற்றில் முன்ஜாமீன் பெற்றுள்ள ஜெயேந்திரர்,உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சனிக்கிழமை காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு வந்தார். அங்கு தனிப்படையினர்மு ன்பு ஆஜராகி கைநாட்டுப் பதிவு செய்தார்.
பின்னர் மீண்டும் கலவை திரும்பிய ஜெயேந்திரர், முதல் முறையாக பக்தர்கள் மு ன்னிலையில் பேசினார். சிறிது நேரமே ஜெயேந்திரர் பேசினாலும் அவரதுபேச்சு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயேந்திரர் பேசுகையில், இனிமேல் கலவையில்தான் தங்கப் போகிறேன். இங்கே நிறைய பழமையான கோவில்கள் உள்ளன. அவற்றையெல்லாம் புதுப்பிக்கவேண்டும். அதை செய்யப் போகிறேன். நிறைய புதிய கோவில்களையும் கட்ட உத்தேசித்துள்ளேன்.
பொதுமக்களுக்கு எனது ஒரே வேண்டுகோள், ஒற்றுமையாக இருங்கள், வேற்றுமையை மறங்கள், ஒருங்கிணைந்து செயல்படுங்கள், பகவான் உங்களுக்குத்துணையாக இருப்பார் என்று பேசினார் ஜெயேந்திரர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications