பாகிஸ்தான்: பள்ளிவாசலில் குண்டு வெடித்து 35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குவெட்டா:
பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் 35 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியிலுள்ள பதாப்பூர் நகரில் ஒரு பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று ஒரு விழா நடந்தது.இதனால் இந்தப் பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென பள்ளிவாசலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 35 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications