சபாநாயகர்கள் கூட்டத்திற்கு போகாதது ஏன்?: காளிமுத்து விளக்கம்
சென்னை:
தமிழக சட்டசபைக்கும், நீதித்துறைக்கும் இடையே சுமூக உறவு நீடித்து வருவதால், டெல்லியில் நாடாளுமன்ற சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி கூட்டிய சபாநாயகர்கள் கூட்டத்திற்கு தான் போகவில்லை என்று சபாநாயகர் காளிமுத்து இன்றுவிளக்கமளித்தார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது தொடர்பாக விவாதிக்க, சோம்நாத் சாட்டர்ஜி,மாநில சபாநாயகர்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டியிருந்தார். இதில் காளிமுத்து மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிநடைபெறும் மாநில சபாநாயகர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து இன்று காளிமுத்து சட்டசபையில் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வாசித்த அறிக்கையில்,
தமிழக சட்டசபைக்கும், தமிழக நீதித்துறைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. தமிழக சட்டசபை, நீதிமன்றங்கள் மீதும்,நீதிபதிகள் மீதும் உயரிய நம்பிக்கை, மரியாதை வைத்துள்ளது. அதேபோல, நீதிமன்றங்களும், நீதிபதிகளும் தமிழகசட்டசபைக்கு உரிய மரியாதையை அளித்து வருகின்றனர்.
அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு இரு தரப்பினரும் சுமூகமாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு மதிப்பளித்தே,சபாநாயகர்கள் மாநாட்டில் நான் பங்கேற்கப் போகவில்லை என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications