இல்லாத கட்சிக்கு மூன்று மாநாடுகள்!!!
சென்னை:
தமிழகத்தில் தொண்டர் பலமே இல்லாத ராஷ்டிய ஜனதாதள கட்சியின் சார்பில் 3 இடங்களில் மண்டல மாநாடுகள்நடைபெறவுள்ளன.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீடிய ஜனதாதளம் கட்சியின் தமிழக கிளை சார்பில் மண்டல மாநாடுகளை நடத்தப் போகிறார்கள்.இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஏ.பி.கேசவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஷ்ட்ரீடிய ஜனதாதளம் சார்பில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில மண்டல மாநாடுகளை நடத்தவுள்ளோம்.
திருச்சியில் மே 3வது வாரத்தில் முதல் மாநாடு நடக்கிறது. மற்ற இரண்டு மாநாடுகளையும் முடித்து விட்டு ஜூலை மாதம் மாநிலமாநாட்டை நடத்துகிறோம். இதில் ராஷ்ட்ரீடிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார். எனவே அவரை காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்தியஅமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும் என்றார்.