முரளீதரன் மதிமலர் திருமணம் நடந்தது
சென்னை:
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கும் சென்னையைச் சேர்ந்த மதிமலருக்கும் இன்றுதிருமணம் நடந்தது.
சென்னை மலர் மருத்துவமனையின் நிறுவனரும் மறைந்த பிரபல மருத்துவருமான டாக்டர் ராமமூர்த்தியின் இளையமகள் தான்மதிமலர்.
இன்று சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் முற்றிலும் தமிழ்முறைப்படி முரளிதரன், மதிமலர் திருமணம் நடந்தது.மங்கல வாத்தியங்கள் முழங்க மதிமலருக்கு மங்கல நாணை முரளீதரன் அணிவித்தார்.
32 வயதான முரளீதரனுக்கும் 24 வயதான மதிமலருக்கும் கடந்த டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இத் திருமணத்திற்குகாரணமாக இருந்தவர் நடிகர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்தது முரளீதரனின் குடும்பம். ஆனால், அவரது மூதாதையர்கள் இலங்கையில்குடியேறிவிட்டனர். முரளீதரன் பிறந்தது கண்டியில்.
இப்போது அவரது குடும்பத்தினர் திருச்சியில் ஹோட்டல் பிஸினசில் ஈடுபட்டுள்ளனர்.
மதிமலர் தனது தாயார் நித்யா ராமமூர்த்திக்குத் துணையாக மலர் மருத்துவமனையின் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இவர்களின் திருமணத்தையொட்டி ராணி மெய்யம்மை ஹாலைச் சுற்றி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இத் திருமணநிகழ்ச்சியில் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜூன ரணதுங்கா, வீரர்களான சனத் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், முன்னாள் இந்தியவீரர்களான ராபின் சிங், டி.ஏ.சேகர், ஆஷிஷ் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத் திருமணத்தைக் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ராணி மெய்யம்மை ஹாலைச் சுற்றி குழுமியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள், திரையுலகைச்சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications