For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர், அத்வானிக்கு சிறந்த எம்பி விருது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட 4 பேருக்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுவழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாகப் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறை சிறந்தபாராளுமன்ற உறுப்பினர்களாக பிரதமர் மன்மோகன் சிங், லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மனிதவளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசியலைஅரசியலாக்காமல் அதை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றால் 2020ம் ஆண்டுக்குள் நாம் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகிவிடலாம்.

ஜனநாயகத்தின் மீது இப்போது மக்களுக்கு சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதை நீங்கள் களைய வேண்டும்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் கலவரங்களால் பாதிக்கப்படும் பழமையான தேர்தல்நடைமுறைகளை மாற்றவேண்டும். அரசியல்வாதிகள் தவறாக நடக்க ஆரம்பித்தால் அது நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியும்.

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. அதுபோன்றசம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என்றார் ஜனாதிபதி.

இதன் பிறகு பேசிய பிரதமர் மன்மோகன், அரசியல் குறித்து பொது மக்களிடையே தவறான கருத்துகள் பரவிவருவதைஅனைவரும் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். பாரளுமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க நாம் விடக்கூடாது.

நாம் ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் குற்றம் கூறிக்கொண்டிருக்காமல் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை உணர்ந்து நாமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X