வேலை நிறுத்தம்: வங்கிப் பணிகள் ஸ்தம்பிப்பு
டெல்லி:
வங்கிகளில் அன்னிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிப்பதை எதிர்த்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைஇணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியா முழுவதும் முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன. தனியார் வங்கிகள் தவிர்த்து பொதுத்துறை வங்கிகள்அனைத்தும் மூடப்பட்டன.
தமிழகத்தில் சுமார் 2,500 வங்கிக் கிளைகள் செயல்படவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். நாட்டின்முக்கியமான 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதே நேரத்தில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, சிட்டி பேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், சென்சூரியன் பேங்க், இண்டஸ்இன்ட் பேங்க்உள்ளிட்ட தனியார் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்கள் செயல்பாடும் பாதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications