விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
சென்னை:
சென்னை அருகே மணலியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மணலி மார்க்கெட், முனுசாமி தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவரது வீட்டில் கழிவு நீர்த் தொட்டியைசுத்தம் செய்வதற்காக ஏழுமலை, ஆறுமுகம் ஆகிய இரண்டு
தொழிலாளர்கள் வந்திருந்தனர். இருவரும் மணலி புதுத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
முதலில் ஏழுமலை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகுஅவரிடமிருந்து எந்த சப்தம் இல்லாததால் ஆறுமுகமும் உள்ளே இறங்கிப் பார்த்தார்.
அவரும் மேலே வராததால் பதற்றமடைந்த பரசுராமன், தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது இரு தொழிலாளர்களும் இறந்து கிடந்தனர்.
கழிவு நீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மணலி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications