For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆணையம் தயார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டால் அதை ஏற்று தேர்தல் நடத்தஆணையம் தயாராகவே உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இனிமேல் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில்வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும்.

தமிழக சட்டசபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டால், அதுகுறித்து அரசியல் சாசனச்சட்டத்தில் கூறியுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த நாங்கள்தயாராகவே இருக்கிறோம்.

இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கானவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடந்து வருகிறது.

அடுத்த மாதம் 7ம் தேதிக்குப் பின்னர் இத் தொகுதிகளின் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவுக்கும், தேர்தல்ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றார் கிருஷ்ணமூர்த்தி.

தொகுதி சீரமைப்புக் குழு அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதிகளை மாற்றி அமைத்து வருவதாக எதிர்க் கட்சிகள்புகார் கூறி வரும் நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X