திருச்சியில் நாளை தமிழ்ப் பாதுகாப்பு மாநாடு
திருவண்ணாமலை:
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நாளை (சனிக்கிழமை) 3வது மொழிப் போர் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்தும், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலிருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும், மூவேந்தர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் திருச்சியை நோக்கி ஊர்திப் பயணங்களை
மேற்கொண்டுள்ளனர். ஊர்திப் பயணமாக திருவண்ணாமலை வந்த ராமதாஸ் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
இதற்கு முன் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்றும் தமிழ், என்றும் தமிழ் என்ற நிலை இருந்தது. இப்போது எங்கு தமிழ் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தான் மொழிக்காக எல்லோரும் சேர்ந்து பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
முன்பு பெரியாரும் அண்ணாவும் இந்தியை எதிர்த்து இரண்டு முறை மொழிப் போர் நடத்தினார்கள். இப்போது நடப்பது 3வது போர். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.
தமிழுக்கு எதிரானவர்களை அடையாளம் காண வேண்டும். நாம் ஒன்றுபட்டால் தமிழின் எதிரிகள் ஓடிப் போய்விடுவார்கள். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழை அழிக்க முயலும் மறைமுக முயற்சிகளை எதிர்க்கிறாம். அவ்வளவு தான்.
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும்.
பேசுபவர் வாயை மணக்கவும், கேட்பவர் காதை இனிக்கவும் செய்யும் மொழி நம் தமிழ். அந்தத் தமிழைக் காக்க தலை தான் விலை என்றால் தலையைக் கொடுத்தும் காப்போம் என்றார் ராமதாஸ்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications