சென்னை-அமெரிக்கா நேரடி விமான சர்வீஸ் தொடக்கம்
சென்னை:
சென்னை - அமெரிக்கா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. ஏர்- இந்தியா நிறுவனத்தின் இந்தமுதல் நேரடி விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு இதுவரை நேரடி விமானப் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. தற்போது பயணிகளின்வேண்டுகோளுக்கிணங்க இங்கிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நேரடி சேவை குறித்து ஏர்- இந்தியா நிறுவனத்தின் வணிகப் பிரிவு மேலாளர் (தமிழ்நாடு) ராஜகோபால் கூறுகையில்,சென்னை- லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க்- சென்னை இடையே இன்று முதல் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்குகிறது. எல்லாஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த விமான சேவை இயங்கும்.
நியூயார்க்- சென்னை இடையே செல்லும் விமானம் லண்டன், மும்பை வழியாக செல்லும். சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்செல்லும் விமானம் மும்பை, பிராங்பர்ட் வழியாக செல்லும் என்றார்.