2014 ஆசிய விளையாட்டுப் போட்டி: உரிமை கோரும் இந்தியா
டெல்லி:
2014ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த உரிமை கோருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே ஒருமுறை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியுள்ளது. இந் நிலையில் 2014ம் ஆண்டுக்கான 17வதுஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், 2014ம் ஆண்டுக்கான ஆசியவிளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டி அனேகமாக டெல்லியில் நடத்தப்படலாம். ஏனென்றால் 2010ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளுக்காகடெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் ஆசியப் போட்டிகளை நடத்துவதற்கு அதிக சிரமம் இருக்காதுஎன்றார்.
சீனா, அடுத்த ஒலிம்பிக் போட்டியையே நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரவுப் பணியில் பெண்களுக்கு அனுமதி:
அலுவலகங்களில் இரவு நேரங்களில் பணிபுரிய இதுவரை பெண்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது மாறிவரும்சூழ்நிலைகளுக்கு ஏற்ப அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களும் இரவு ஷிப்டுகளில் பணிபுரிய மத்தியஅமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜெய்பால் ரெட்டி கூறுகையில், அலுவலகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்புஇருக்கும் பட்சத்தில் பெண்கள் பணிபுரியலாம். இதற்காக தொழிற்சாலைகள் சட்டம் 1946 திருத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications