சட்டசபையை எதிர்க் கட்சிகள் இன்று முதல் 1 வாரம் புறக்கணிப்பு
சென்னை:
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் வளர்மதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துசட்டப் பேரவையை இன்று முதல் ஒருவார காலத்துக்கு புறக்கணிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். அதில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை ஊரகத் தொழில்துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில் கருணாநிதியை இழிபடுத்தியும் அவர் பிறந்தசமூகத்தையும் அச் சமூகத்தின் தொழிலை கேவலப்படுத்தியும் அவதூறாகப் பேசினார்.
இதை எதிர்த்துக் கேட்ட திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சபாநாயகர் காளிமுத்து வெளியேற்றினார். இதே போலகாங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை குறித்தும் அமைச்சர் கிண்டலடித்துப் பேசினார்.இதனால் அனைத்துக் கட்சிகளும் வெளிநடப்பு செய்யும் நிலை உருவானது.
மேலும் திங்கள்கிழமையும் அவைக் காவலர்களை விட்டு காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சி எம்எல்ஏக்களை சபாநாயகர்வெளியேற்றினார்.
சபாநாயகரின் முழு ஒத்துழைப்போடு, முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலோடு, பேரவை மரபுகள்-விதிகளுக்கு மாறாக எதிர்க்கட்சியினரை கேவலப்படுத்தும் விதத்தில் ஆளும்கட்சியினர் பேசுவது வழக்கமாகிவிட்டது.
இதைக் கண்டித்து இன்று முதல் (29ம் தேதி) ஒரு வாரகாலத்துக்கு சட்டசபையை எதிர்க் கட்சிகள் புறக்கணிக்கின்றன.
ஒரு வாரத்துக்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் ஜனநாக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூடி அடுத்தகட்டநடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள்.
இது தொடர்பாக ஆளுநரிடம் முறையிடப் போவதில்லை. சபாநாயகர் காளிமுத்து மீது நம்பிக்கை போய் ரொம்ப நாள்ஆகிவிட்டது. ஒரு மரபுக்காகத் தான் அவரை மதித்து நடந்து வருகிறோம்.
வரும் 3ம் தேதி சட்டப் பேரவையில் அதிமுகவின் போக்கு குறித்து விளக்கும் கண்டனப் பொதுக் கூட்டம் சென்னைசிந்தாதிரிப்பேட்டையில் நடக்கும். இதில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications