For Daily Alerts
Just In
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கின
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடங்கின. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
பிளஸ் டூ தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. மொத்தம் 7,68,815மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகின்றனர்.
இதில் மாணவர்கள் 3,56,574. மாணவிகள் 3,47,357 பேர். மாநிலம் முழுவதும் 2,492 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகின்றன. விடைத்தாள்களைத் திருத்த 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் பணி 15ம் தேதி தொடங்குகிறது.
சுனாமி பாதித்த பகுதிகளில் ஏப்ரல் 28ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தனியாக நடக்கின்றன. இதற்காக தனி தேர்வுத் தாள்கள்தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 138 பள்ளிகளைச் சேர்ந்த 16,564 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர்.
Story first published: Tuesday, March 29, 2005, 5:30 [IST]