சென்னையில் புதிய கல்லறைகள்: கிறிஸ்தவர்கள் கோரிக்கை
சென்னை:
சென்னையில் 6 புதிய கல்லறைத் தோட்டங்கள் அமைக்க சென்னை கல்லறைகள் வாரியம், தமிழக அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளது
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தில் சடலங்களைப் புதைக்க இடம்இல்லாத காரணத்தால் இன்று முதல் அந்தக் கல்லறைத் தோட்டம் மூடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை கல்லறைகள் வாரிய கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வாரியத் தலைவர்பாதிரியார் லாரன்ஸ் பேசுகையில், சென்னையில் உள்ள மற்ற கல்லறைத் தோட்டங்களிலும் இடப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது.
காசிமேடு கல்லறைத் தோட்டத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு மட்டுமே சடலங்களைப் புதைக்க இடம் உள்ளது.
எனவே சென்னை நகரில் சடலங்களைப் புதைக்க புதிய இடங்களை ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.வேளச்சேரி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், பூந்தமல்லி, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்தப் புதியகல்லறைத் தோட்டங்களுக்கு இடம் ஒதுக்கக் கோரியுள்ளோம்.
இது மிகவும் அவசரமான, அடிப்படையான தேவை என்பதால் தமிழக அரசு தனது ஒப்புதலை விரைவில் அறிவிக்கக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார் லாரன்ஸ்.












Click it and Unblock the Notifications