நீதிபதி தீர்ப்பளித்த மறு நிமிடம் குற்றவாளி சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கற்பழிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட வாலிபர் நீதிமன்றத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இச் சம்பவம் மதுரை பெண்கள் நீதிமன்றத்தில் நடந்தது.
கடந்த 2003ம் ஆண்டு தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சிறுமியை கற்பழித்ததாக சார்லஸ் (27) என்ற அந்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது மதுரை பெண்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
நேற்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சார்லசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி அண்ணாமலை தீர்ப்பளித்தார்.
இதைக் கேட்ட சார்லஸ் நெஞ்சு வலிப்பதாகக் கூறியவாரே மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரது முகத்தில் தண்ணீர்தெளித்தனர். ஆனால், அவர் எழவில்லை.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து சோதனையிட்டபோது சார்லஸ் இறந்து போயிருந்தார்.












Click it and Unblock the Notifications