பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது சரி தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி அருகே ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தவர் பிரேமானந்தா. வாயிலிருந்து லிங்கம் வரவழைப்பது,அந்தரத்திலிருந்து திருநீறு , குங்குமம் வரவழைப்பது என பல சித்து விளையாட்டுகள் மூலம் பக்தர்களை ஆச்சரியத்தில் மூழ்கவைத்தார். இவரது புகழைக் கேட்டு ஏராளமான வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பிரேமானந்தாவுக்கு பக்தர்களானார்கள்.
இந் நிலையில் தான் பிரேமானந்தா மீது ஆசிரமத்திலிருந்த 13 பெண்களை கற்பழித்ததாகவும், ஒரு வாலிபரை கொலைசெய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 1997ம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா அப்பீல் செய்தார்.
உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகும் மனம் தளராத அவர்,உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு நீதிமன்றங்களிலும் பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை சரிதான் என இன்று தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications