பாக்.வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு

Subscribe to Oneindia Tamil

ஜாம்ஷெட்பூர்:

ராஞ்சியிலிருந்து ஜாம்ஷெட்பூருக்கு செல்லும் வழியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்சின் மீது கற்கள் வீசப்பட்டன.இதில் அந்த அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் காயம் ஏற்படாமல் தப்பினார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் 3வது ஒரு நாள் போட்டி ஜாம்ஷெட்பூரில் 9ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகவிசாகப்பட்டினத்திலிருந்து விமானம் மூலம் நேற்று ராஞ்சி வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஒரு பஸ்சில்ஜாம்ஷெட்பூருக்கு புறப்பட்டனர்.

பஸ் புறப்பட்ட போது திடீரென ஒருவர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசினார். இதில் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அமர்ந்திருந்தஇருக்கையின் அருகிலுள்ள ஜன்னல் மீது பட்டு கண்ணாடி உடைந்தது.

ஆனாலும் அதிர்ஷ்டவசமாக இன்சமாமுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் வீரர்கள் கடும்அதிர்ச்சியடைந்தனர்.

ஆனாலும் இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் செய்யப்போவதில்லை என்று பாக். அணியின் மேனேஜர் சலீம் அல்தாப்கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் புகார் எதுவும் செய்யப்போவதில்லை.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+