100 புதிய டிஎஸ்பி பதவிகள்- அரசு உத்தரவு
சென்னை:
தமிழக காவல் துறையில் புதிதாக 100 டிஎஸ்பி பதவிகளை ஏற்படுத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல வேலூர், விழுப்புரம், சேலம், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை மற்றும்ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலா ஒரு டிஎஸ்பி பதவிஏற்படுத்தப்படுகிறது.
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள க்யூ பிராஞ்ச் போலீஸுக்கு தலா ஒரு டிஎஸ்பிபதவி ஏற்படுத்தப்படுகிறது. சென்னை நகரம், கோவை, வேலூர், சேலம் ஆகிய சரகங்களில் சமூக நீதி மற்றும் மனித உரிமைபிரிவுக்கு தலா ஒரு டிஎஸ்பி பதவி உருவாக்கப்படுகிறது.
விழுப்புரம், திண்டுக்கல் பயிற்சி மையங்களில் 2 டிஎஸ்பி பதவிகளும், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரியில் மேலும் ஒருடிஎஸ்பி பதவியும், டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் புதிதாக 4 பதவிகளும், கோவை, மதுரை நகரங்களில் உள்ளகட்டுப்பாட்டு அறையில் 2 உதவி கமிஷனர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் மேலும் 3 உதவி கமிஷனர்களும், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருச்சி, நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தேனி, நாகை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிசரகங்களில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவுகளில் புதிய டிஎஸ்பி பதவிகள் உருவாக்கப்படும்.
மதுரை நகரில் அண்ணா நகர் குற்றப்பிரிவு மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரிவில் 2 டிஎஸ்பிகள் நியமிக்கப்படுவார்கள். கரூர்,நாமக்கல், தேனி, திருவாரூர், ராமநாதபுரம், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் திருநெல்வேலி, திருச்சி, சேலம்நகரங்களில் உள்ள குற்ற ஆவண காப்பகங்களில் தலா ஒரு டிஎஸ்பி பதவி உருவாக்கப்படுகிறது.
திருச்சிக்கு 4ம், கோவைக்கு 1ம், திருநெல்வேலியில் 2ம், சேலம் நகரில் குற்றப்பிரிவுக்கு 3 டிஎஸ்பி பதவிகளும்உருவாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications