ஆந்திர அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து ஆந்திர அரசு, சென்னைக்கு உரிய நீரை தராமல் இருந்தால் அந்த மாநில அரசு மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி இன்று பேசுகையில், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு, ஆந்திர அரசுகிருஷ்ணா நதியிலிருந்து முறையாக தண்ணீர் வழங்குவதில்லை. இந்தப் பிரச்சினையில் அரசின் நிலை என்ன என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தெலுங்கு கங்கை திட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை ஒரு ஆண்டு கூடஆந்திர அரசு உரிய நீரை விடுவிக்கவில்லை.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரை சென்னைக்கு ஆந்திர அரசு வழங்க வேண்டும். ஆனால் ஒருமுறை கூட இந்த அளவு தண்ணீரை விடுவித்ததில்லை.

ஆந்திர அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்குப் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆந்திரா தொடர்ந்து இதேபோலநடந்து கொண்டதால், ஆந்திர அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+