பாப்பாபட்டி: மூமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தலை நடத்த கோரி மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் மதுரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்த முடியாத நிலைதொடர்ந்து நிலவி வருகிறது. அங்கு தேர்தல் நடத்த ஒரு சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக தலித் மக்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்வதில்லை. அப்படியே போட்டியிட்டு வெற்றி பெற்றாலும்,அடுத்த நிமிடமே பதவியை ராஜினாமா செய்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் மதுரையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் திமுக,விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை கலந்து கொண்டன.

இக்கூட்டத்திற்குப் பின்னர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3தலித் பஞ்சாயத்துக்களிலும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலித்துகள் யாரும்வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வராத நிலை காணப்படுகிறது.

இதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைசெய்ய அரசு தவறினால், உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+