கனமழை: நாமக்கலில் ஏரி உடைந்து 7 பேர் பலி
சென்னை:
![]() |
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழைபெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
நேற்றும் பல இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. நாமக்கல், தர்மபுரி, ஓசூர் உட்பட பல இடங்களில் நேற்று பல மணிநேரம்விடாது மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இங்கிருந்து திருச்சிமாவட்டத்திற்குள் பாயும் காட்டாற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 6 பேருடன் வந்த ஒரு கார் சிக்கியது.
அந்தக் காரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4பேர் தப்பினர். 2 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதேபோல பள்ளிப்பாளையம் பகுதியில் மட்டும் நேற்று பெய்த மழைக்கு 8 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இங்குதொடர்ந்து பெய்த மழையால் ஆனங்கூர் ஏரி உடைந்தது. இதில் அங்குள்ள குடிசைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 20க்கும்மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த பலர் வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதில் 7 பேர் பலியானார்கள்.
நேற்று மட்டும் இம்மாவட்டத்தில் மழைக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.













Click it and Unblock the Notifications