குடிகாரர்களின் மாநிலம்: ஜெ.மீது ராமதாஸ் பாய்ச்சல்
திண்டிவனம்:
தமிழகத்தை முதன்மையான குடிகாரர்களின் மாநிலமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவுக்கே உரியது என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால், நாட்டிலேயே குடிகாரர்கள் அதிகம் உள்ள, குடிகாரர்களின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை தற்போது மாற்றியுள்ளார்.
தொழில் வளர்ச்சி என்பது கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லவே இல்லை. 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோதுதொழில்துறையில் தமிழகம் எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது.
நாட்டின் பிற நகரங்களின் வளர்ச்சியை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய் விட்டது.அரசின் தொலை நோக்கற்ற செயல்பாடுகளே இதற்குக் காரணம்.
பெங்களூர், ஹைதராபாத் நகரங்களை ஒப்பிடுகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஅடையவில்லை.
சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களையும் ஹைடெக் நகரங்களாக மாற்றவேண்டும் என்றார் ராமதாஸ்.