உகாதி: பர்னாலா, ஜெ. வாழ்த்து
சென்னை:
உகாதி பண்டிகையையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுடைய வாழ்க்கையில் வளமும், மகிழ்ச்சியும்தழைத்தோங்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில்,தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது அகம் கணிந்த உகாதிவாழ்த்துக்கள். தமிழகம் அமைதிப் பூங்கா, இங்கு மொழியால் வேறுபட்ட மக்கள் இதயத்தால் இணைந்து வாழ்கிறார்கள். அப்படி வாழமுடியும் என்பதற்கு தமிழகம் இனிய எடுத்துக் காட்டு.
பல நூறு ஆண்டுகளாக இதை உணர்த்தி வரும் தமிழகம் வேற்றுமையிலும், ஒற்றுமை என்ற தத்துவத்தை நிரூபித்து வருகிறது.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பசும் மக்கள் தங்களது பாரம்பரியத்தை கப்ைபிடிக்கும் அதே நேரத்தில் தமிழக மக்களோடு, தமிழர்களாகவாழ்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.