பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம்!
சென்னை:
தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம்கட்டப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க ஜூன் முதல் வாரம் போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பானமண்ணின் மைந்தர்கள் கழகம் அறிவித்துள்ளது.
பஞ்சமி நிலம் என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட நிலமாகும். இன்றுஇந்த நிலங்கள் தலித் சமுதாயத்தினரிடமே இல்லை.
இந் நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அமைந்துள்ள அலுவலகம், பஞ்சமி நிலத்தைஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக மண்ணின் மைந்தர் கழகம் என்ற அமைப்பு புதிய புகாரைக் கூறியுள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பார்வேந்தன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார்.ஆனால் திமுகவின் நாளேடான முரசொலி அமைந்துள்ள அலுவலக இடமே பஞ்சமி நிலம் தான்.
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துத்தான் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்பதற்காக,ஜூன் மாதம் முதல் வாரத்தில், மண்ணின் மைந்தர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம்.
சுய லாபத்திற்காகவே தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர் ராமதாஸும்,திருமாவளவனும். இந்த அமைப்பு உண்மையான நோக்கத்துடன் செயல்படவில்லை என்றார் பார்வேந்தன்.
பார்வேந்தனை அதிமுக தலைமை தான் பின்னணியில் இருந்து இயக்குவதாக திமுக கூறுகிறது.












Click it and Unblock the Notifications