For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐநா பாதுகாப்பு சபை: இந்தியாவுக்கு நிரந்தர பதவி- சீனா ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என்று சீனஅதிபர் வென் ஜியாபோ கூறினார்.

சீன அதிபர் ஜியாபோ, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் இந்தியா வந்தார். நேற்று பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனஅதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், நேற்றிரவு டெல்லி வந்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் வென் ஜியாபோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவர்நிருபர்களிடம் பேசுகையில், எனது இந்த சுற்றுப்பயணம் இந்திய மற்றும் சீன வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களிலும் இருநாடுகளுக்கு இடையே நட்புறவு தொடரும் என்று உறுதி கூறுகிறேன். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைமூலம் நிச்சயம் தீர்வு காணப்படும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது என்றார்.

இதன் பிறகு ராஜ்காட் சென்ற அவர், மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து ஜியாபோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினை, வியாபார ஒப்பந்தம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனைசெய்யப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே 5வருட பொருளாதார ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X