ஏப்ரல் 14: "ஜெயலலிதா தினம்"!!!!
சென்னை:
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை, ஜெயலலிதா தினமாக கொண்டாட உலகத் தமிழ் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.
இந்தப் பேரவை தான் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டியதாகக் கூறிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பார்வையிடவுள்ளனர்.6 நாட்கள் சுற்றுப் பயணமாக வந்திருக்கும் கென்யக் குழுவினருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழ் இளைஞர் பேரவைசார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்யக் குழுவினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இந்தப் புகைப்படம்கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வைக்கப்படும் என கென்ய குழுவின் தலைவர் நியான் கேசாதெரிவித்தார். (அட்ரா சக்கை!!)
பின்னர் உலகத் தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய் பிரபாகர் கூறுகையில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மிக சிறப்பாககொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை ஜெயலலிதா தினமாக கொண்டாடப் போகிறோம்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை ,சீனா ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் இளைஞர் பேரவை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது என்றார்பிரபாகர்.












Click it and Unblock the Notifications