குளத்தில் கொதிக்கும் குமிழிகள்: பூமிக்குள் இருந்து வாயு கசிவு- பொதுமக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி & திருவாரூர்:

Bubbles

தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் குளங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நீர்க் குமிழிகளால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹைதராபாத் புவி இயற்பியல் விஞ்ஞானிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் கிராமம் வறட்சியான பகுதியாகும். இங்குள்ள பல குளங்கள் கடந்தபல வருடங்களாக நிரம்பியதே கிடையாது. ஆனால் சமீபத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் இந்தக்கிராமத்திலுள்ள பல குளங்கள் நிரம்பின.

இந்நிலையில் இங்குள்ள ஒரு குளத்தில் திடீரென்று நீர்க்குமிழிகள் தோன்றியுள்ளன. முதலில் இதை அப்பகுதியினர்பொருட்படுத்தவில்லை. ஆனால் நேரம் செல்லச்செல்ல நீர்க்குமிழிகள் அதிக அளவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்படத்தொடங்கியது.

சோற்றுப் பானையில் சோறு கொதிப்பதைப் போன்ற சத்தத்துடன் இந்த நீர்க்குமிழிகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. இதனால்குளமே கொதிப்பது போல காட்சியளிக்கிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் ராஜாராம், கயத்தாறு போலீஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

இது குறித்து ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நீர்க்குமிழிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதால் இக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெற்காசியாவில் சமீபத்தில் தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமியையடுத்து பூமிக்கு அடியில் இருந்து வாயுக்கசிவுஏற்பட்டுள்ளதால் இந்த குமிழிகள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வாயு கசிவு:

Gas

தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலிலும் தேங்கிக் கிடந்த தண்ணீலிருந்து நீர்க்குமிழிகள் வரத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வடசங்கேத்தி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் தேங்கிய மழைத் தண்ணீலிருந்து நீர்க் குமிழிகள் வரத் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பின்னர் ஆட்சித் தலைவர் ஏகாம்பரம் கூறுகையில், வயல் வறண்டு கிடந்து அதில் தண்ணீர் தேங்கினால் இதுபோல காற்றுவெளியேறுவது வழக்கமான நிகழ்வுதான். அதனால்தான் நீர்க்குமிழிகள் தோன்றியுள்ளன. எனவே பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என்றார்.

மேலும் இம் மாவடத்தில் திருத்துறைப்பூண்டியில் வயல்வெளியில் இருந்து வாயு வெளியானதால் அங்கும் பீதி பரவியது.திடீரென வயலில் இருந்து வெண் நிறத்தில் புகையாக இந்த வாயு வெளியேறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+