சோனியா மீது வழக்கு: சு. சுவாமி மனு தள்ளுபடி
டெல்லி:
தனது கல்வித் தகுதி குறித்து பொய்யான தகவல் தந்த சோனியா காந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்தியாவின் கோயபல்ஸ் என்ற பெயர் வாங்கும் அளவுக்கு எதையாவது கூறிக் கொண்டிருக்கும் சுவாமி, சமீபகாலமாகசோனியா காந்தியை டார்கெட் செய்து வருகிறார்.
ஆங்கிலத்தில் வெறும் பட்டயப் படிப்பு (சர்டிபிகேட் கோர்ஸ்) மட்டுமே பெற்றுள்ள சோனியா காந்தி, தான் கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் உயர் கல்வி பயின்றதாக பொய்யான தகவலை தேர்தல் கமிஷனிடம் தந்துள்ளதாக சுவாமி கூறிவந்தார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தொகுதியில் போட்டியிட்டபோது, தன்னை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமாணவி என்றும், ஆங்கில உயர் கல்வி பெற்றவர் என்றும் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் விசாரித்தபோது அங்கு ஆண்டோனியோ மொய்னோ (சோனியா காந்தி)படிக்கவே இல்லை என்று தெரியவந்தது.
அவர் 1965ம் ஆண்டில் லெனோக்ஸ் குக்ஸ் ஸ்கூலில் ஆங்கிலத்தில் பட்டயப் படிப்பு மட்டுமே படித்துள்ளார்.
வேட்பு மனுவில் பொய்யான தகவலைத் தந்து தன்னை மிகவும் படித்த பெண் போல காட்டிக் கொண்டு ஓட்டு வாங்கிவாக்காளர்களை ஏமாற்றிய சோனியா மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுவாமி கோரியிருந்தார்.
சுவாமியின் மனுவை விசாரித்து அவரது விரிவான வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர் ஆகியோர்இன்று அம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
சோனியா காந்தி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில், தன்னை லெனோக்ஸ் குக் ஸ்கூல் மாணவி என்று தான்குறிப்பிட்டுள்ளார். கேம்ப்ரிட்ஜ் மாணவி என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை. இதனால் சுவாமியின் மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.