சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
சட்டசபை குழுக்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காததைக் கண்டித்துசட்டசபையிலிருந்து திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
இந்தத் தீர்மானத்துக்கு திமுக துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.
துரைமுருகன் பேசுகையில், சட்டசபைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக இருந்தால் முன் கூட்டியே எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்வது மரபாக இருந்து வருகிறது.
ஆனால் முன் கூட்டியே சொல்லாமல், கலந்து ஆலோசிக்காமல் திடீரென பதவி நீட்டிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்வதுகண்டனத்துக்குரியது என்றார். இதே கருத்தை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் தெரிவித்தார்.
ஆனால் சபாநாயகர் காளித்து, எதிர்க்கட்சியினரை கலந்து ஆலோசித்துத்தான் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றுவிதியில் கூறப்படவில்லை. அதேபோல, அலுவல் ஆய்வுக் குழுவிலும் இந்தத் தீர்மானத்தை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.இக் கருத்தை பொன்னையனும் ஆமோதித்து பேசினார்.
தங்களது கருத்து நிராகக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த துரைமுருகனும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், இதைக் கண்டித்து வெளிநடப்புச்செய்தவதாக கூறி வெளியேறினர். அவரைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்புச் செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. ஆனால், பாஜக வெளிநடப்பு செய்யவில்லை.
வெளிநடப்புக்குப் பின்னர் அரசின் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications