For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரதட்சணை: செருப்பால் அடித்த கணவன்- மனைவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஏற்காடு:

வரதட்சணை கேட்டு கணவன் செருப்பால் அடித்ததால் மனம் நொந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்காடு பெரியகாடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமகிருஷ்ணன் (25). இவரது மனைவி தனலட்சுமி (23). ஒன்றரைஆண்டுகளுக்கு முன் 10 பவுன் நகை, ரூ. 15,000 வரதட்சணை கொடுத்து இவர்களது திருமணத்தை நடத்தி வைத்தனர்.

ஆனாலும் மேலும் பணம் வாங்கி வரச் சொல்லி தனலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் ராமகிருஷ்ணன்.

சமீபத்தில், பெற்றோரிடம் போய் ரூ. 2,000 வாங்கி வருமாறு தனலட்சுமியை நிர்பந்தித்துள்ளார். அவர் தனது வீட்டின் கஷ்டத்தை சொல்லிஅழவே, அவரை செருப்பால் அடித்துள்ளார்.

இதனால் மனமொடிந்து போன அந்த இளம்பெண் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X